October 23, 20242:00 PM IST
Tamil Live Breaking News: வங்கக்கடலில் உருவானது ‘டானா’ புயல்!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு 11.30 மணி நிலவரப்படி, ஒடிசாவுக்கு தென்கிழக்கே 670 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்துக்கு தென்கிழக்கே 720 கிலோமீட்டர் தொலைவிலும் 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது புயலாக வலுப்பெற்றது. இதற்கு டானா எனப் பெயரிடப்பட்டுள்ளது. டானா புயல், வடமேற்கு நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்து, நாளை இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.