தற்போதைய சந்தை நிலவரப்படி ரத்தன் டாடா வசித்து வந்த வீட்டின் மதிப்பு ரூ.150 கோடியாகும். மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு வாரியம் கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்த கட்டடம் மிகவும் சிதிலடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டில் இக்கட்டடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த வீடு ரத்தன் டாடாவிற்கு டாடா குழுமம் தனது விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.
அவர் மறையும் வரை அவர் டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக இருந்ததால் அவருக்கு இந்த வீடு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. பிரபல கட்டடக் கலைஞர் ரத்தன் பாட்லிபாய் உதவியுடன், ரத்தன் டாடாவே இந்த வீட்டை வடிவமைத்து தனது விருப்பப்படி கட்டினார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு, டாடா டிரஸ்ட்ஸ் (Tata Trusts) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நோயல் டாடா இந்த இல்லத்திற்கு மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.
நோயல் டாடா தற்போது மும்பையின் கஃப் பரேடில் உள்ள விண்டர்மேர் என்ற ஆறு அடுக்கு மாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்த இல்லம் காலியாக இருப்பதைத் தவிர்க்கவும், டாடா குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடரவும் நோயல் டாடா இங்கு குடியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நோயல் டாடா அல்லது குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் தங்குவதற்கு ஏதுவாகச் செய்யப்பட்ட ஏற்பாடாகவே டாடா சன்ஸ் நிறுவனம் இந்த இல்லத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.