தோல்வியை தழுவிய வாரிசுகள்
சிவசேனா(ஷிண்டே) 90 இடங்களிலேயே போட்டியிட்டது. ஷிண்டேவின் சேனா தலைவர்களின் வாரிசுகளுக்கு அதிக அளவில் சீட் கொடுத்து இருந்தது. தற்போது மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் / எம்பிக்கள் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது. முன்னாள் எம்பி ராகுல் ஷெவாலேவின் மைத்துனி வைஷாலி நயன் ஷேவாலே வார்டு 183வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ சதா சர்வான்கரின் மகன் சமாதான் மற்றும் மகள் பிரியா முறையே 194 மற்றும் 191 (ஒர்லி, மாகிம்)வது வார்டிலும், குர்லா எம்எல்ஏ மங்கேஷ் குடால்கரின் மகன் ஜெய் குடால்கர் (கே) 169வது வார்டிலும் போட்டியிட்டனர்.
சேனா எம்.பி ரவீந்திர வாய்கரின் மகள் தீப்தி வாய்கர்-போட்னிஸ் வார்டு 73ல் (ஜோகேஸ்வரி) போட்டியிட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் தோற்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரவீந்திர வாய்கரின் மனைவி போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவினார்.
இதேபோல், பாண்டூப் எம்எல்ஏ அசோக் பாட்டீலின் மகன் ரூபேஷ் பாட்டீல் 113வது வார்டில் போட்டியிட்டார். முன்னாள் கவுன்சிலர் தீபக் ஹண்டேவின் மனைவி அஷ்வினி ஹண்டேவுக்கு 128 (காட்கோபர்)வது வார்டில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தோல்வி அடைந்தனர். உத்தவ் தாக்கரேயிடமிருந்து பிரிந்து சென்ற முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் தோல்வியை தழுவினர்.
மும்பையில் முஸ்லிம் வேட்பாளர்கள் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோவண்டி பகுதியில் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்த அனைத்து வார்டுகளையும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிடித்துள்ளது.