கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய்தான். கோட்டையைப் பிடிக்கிறேன், பிடிக்கிறேன் என்று சொல்லி இத்துப் போன செங்கோட்டையனை பிடித்துள்ளார் விஜய். இது ஒரு நாடகக் கம்பெனி போல ஓடிக் கொண்டிருக்கிறது.
பஞ்ச் டயலாக் எழுதி வந்து ஆவேசமாகப் பேசுவது அரசியல் அல்ல. தி.மு.க எங்களின் அரசியல் எதிரி. பா.ஜ.க கொள்கை எதிரி என்று கூறும் த.வெ.க தலைவர் விஜய், சேலத்தில் நடந்த கூட்டத்தில்கூட ஸ்டாலின் சார், முதல்வர் சார் என்று பேசிய விஜய், ஏன் எஸ்.ஐ.ஆர் பற்றி பேசவில்லை?

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதிராக இவ்வளவு வஞ்சகத்தை மோடி செய்கிறாரே? விஜய் ஒரு வார்த்தை பேசியிருக்கலாமே? உங்களுக்கு டயலாக் எழுதிக் கொடுத்தவர் எழுதித்தரவில்லையா? உங்களுக்கு உங்கள் அரசியல் எதிரிதான் முக்கியமா? இல்லை சித்தாந்த எதிரி முக்கியமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியதிருக்கிறது” என்றார்.