“கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரத்தின் சாதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிக்கைக்கு பாத்திரமானதாகவும் பரந்தளவில் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது. இன்று இந்திய பொருளாதாரம் பெரும்பொருளாதாரத்தின்(மேக்ரோ எகனாமிக்) அடிப்படைகளால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறவிருக்கிறோம்.
கடந்த நான்காண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இந்திய பொருளாதாரம் சுமார் 8 சதவீதத்தை எட்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக சராசரி பணவீக்கம் 4.9 சதவீத அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
2024-ஆம் நிதியாண்டில் நடப்புகணக்கு பற்றாக்குறையானது ஜிடிபியின் 0.6 சதவீதம் என்ற அளவில் நிலைபெற்றிருக்கிறது.
நாங்கள் நிதி நிலைத்தன்மையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடருவோம். இதுவே எங்களது முதன்மை குறிக்கோள்.