நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார். வழக்கம்போல் இன்றும் ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறார். மாவனல்லா அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாளை இன்று மதியம் புலி ஒன்று தாக்கியிருக்கிறது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி இழுத்துச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறிய உள்ளுர் நபர் ஒருவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்திருக்கிறார். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் காவல்துறையினருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.