Trisha: “தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டேன்…" – பதிலடி பதிவு

Spread the love

சமீபகாலமாக தொடர்ந்து நடிகை த்ரிஷா தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டதில் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்களின் விமர்சனங்கள் வரை நடந்தது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பிரபலம் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா திரைத்துறையைவிட்டு விலகப்போவதாகத் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தியும் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னைப்பற்றி பரவிய வதந்திகளைக் கிண்டல் செய்யும் விதமாக பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

த்ரிஷா
த்ரிஷா

அதில், “வெளிப்படையாகச் சொல்லப்போனால், நான் சினிமாவிலிருந்து விலகிவிட்டேன். ஒரு பணக்கார தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டேன். இரண்டு வயதான நான்கு குழந்தைகளுக்குத் தாயாக அவர்களை வளர்த்து வருகிறேன்! (இன்னும் ஏதாவது நான் சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய கற்பனை கதை போதுமா?)” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் அவர் திரைத்துறையைவிட்டு விலகவில்லை என்பதையும், அவர் தொடர்ந்து நடிப்பார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் தொடர்பாக பகிரப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனை என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பதிவு வைரலாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *