இதை இன்னொரு பக்கம் பார்த்தால், ட்ரம்ப் இதுகுறித்து பேசியிருக்கும் தருணம் மிக முக்கியமானது என்றும் கூறலாம். நாளை வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள். இந்த சூழலில் ட்ரம்ப் இப்படி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.
காரணம், அவர் ஒவ்வொரு நாட்டையும் வரியைக் காட்டிதான் மிரட்டி வருகிறார். அதே ஃபார்முலாவை இந்தியாவிற்கு ஃபாலோ செய்கிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது.
அடுத்ததாக, இந்த வரியால் இந்தியா பாதிக்கப்படுமா… அமெரிக்கா பாதிக்கப்படுமா என்று பார்த்தால், அமெரிக்கா தான் பாதிக்கப்படும்.
காரணம், இந்தியா தனது மொத்த அரிசி ஏற்றுமதியில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே அமெரிக்காவிற்கு செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனது 25 சதவிகித பயன்பாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்கிறது.
இதனால், இந்த விஷயத்தில் ட்ரம்ப் மிக கவனமாக இருக்க வேண்டும்.