Two transformers were stolen after cutting off electricity – Police searching for thieves-மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பர்மர்கள் திருட்டு” – திருடர்களை தேடி வரும் போலீஸார்

Spread the love

பொதுவாக தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டம், இட்டமொழியில் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் இலங்கையாகுடிகுளம், வேலாயுதபுரம் ஆகிய காட்டுப்பகுதியில் மின்கம்பங்களில் ‘டிரான்ஸ்பார்மர்கள்’ நிறுவப்பட்டிருந்தன.

திருடப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள்

திருடப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள்

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மினிலாரியில் வந்த ஒரு கும்பல், மின் கம்பத்தில் ஏறி டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பினை துண்டித்துள்ளனர். பின்னர், டிரான்ஸ்பார்மரில் கயிறு கட்டி கீழே இறக்கி வாகனத்தில் ஏற்றி அப்பகுதியில் இருந்த 2 டிரான்ஸ்பார்மர்களையும் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் விவசாயிகள் தங்களின் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *