தாஜ்மகால் கட்டியது ஷாஜகான் மட்டுமல்ல, இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பைசுல் ஹசன் என்ற ஓய்வுபெற்ற தபால்காரரும் தான். இவருக்கும் இவர் மனைவி தஜமுல்லிக்கும் குழந்தைகள் இல்லை. இறக்கும் தருவாயில் தஜமுல்லி, “நமக்குக் குழந்தைகள் இல்லை, நான் இறந்த பிறகு என்னை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்” என்று வருந்தி அழுதார்.
அப்போது பைசுல், “நீ கவலைப்படாதே, மக்கள் உன்னை என்றும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு நான் ஏதாவது செய்வேன்” என்று சத்தியம் செய்தார். மனைவி இறந்த பிறகு, தன் ஓய்வூதியப் பணம், சேமிப்பு அனைத்தையும் போட்டு, தன் வீட்டின் அருகிலேயே மனைவிக்காக ஒரு ‘குட்டி தாஜ்மகாலை’ கட்டினார். ஷாஜகான் அளவுக்கு வசதி இல்லாவிட்டாலும், காதலில் இவர் சளைத்தவர் இல்லை.
இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பாடம். அரியணை, செல்வம், காலம் என எதற்கும் அடிபணியாததுதான் உண்மையான காதல் என்பதை இவை உணர்த்துகின்றன. மனிதர்கள் மறைந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற இந்த அன்பின் சுவடுகள் இன்றும் உலகிற்கு காதலின் மேன்மையைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. காதல் என்றும் வாழ்க!