VCK : ‘நமக்காக பேச யாருமில்லை’ – தொகுதி பங்கீட்டீல் இழுபறி.. விரக்தியடைந்த விசிக நிர்வாகிகள்! | VCK Cadres Frustrated on DMK’s Move in Seat Sharing

Spread the love

வி.சி.க – தி.மு.க இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை என்றும் வி.சி.க-வுக்காக குரல் கொடுக்க தி.மு.க கூட்டணியில் யாருமே இல்லை என விரக்தியடைந்து வருகிறார்கள் வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர்.

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

வி.சி.க மாணவரணி துணைச் செயலாளர் நெப்போலியனின் சமூக வலைதள பதிவில், “தி.மு.க-வில் இருக்கிற நாயுடு சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் தே.மு.தி.க-வை கூட்டணிக்கு கொண்டுவந்து அதிக தொகுதிகளை வாங்கிதந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பகிரங்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், தி.மு.க-வில் இருக்கும் தலித் அமைச்சர்கள், நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்பேர்பட்டாவது விடுதலை சிறுத்தைகளை காலி செய்து விட வேண்டும் அவர்களை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களைத்தான் நாம் பார்க்க முடிகிறது. திமுகவில் லாபி செய்வதற்கு நமக்கு யாரும் இல்லை நம்ம தலைவர்தான் பேசி பேசி சீட்டை அதிகம் பெற்று ஆக வேண்டும்” என்றிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *