Vijay: வருமானத்தை மறைத்த வழக்கு: விஜய் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்; என்ன நடந்தது?| Vijay: Income concealment case: The High Court dismissed Vijay’s petition! – What happened?

Spread the love

அப்போது விஜய் தரப்பில், ‘‘சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக, சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’’ என்று வாதிட்டார்.

அபராதம் விதித்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை

வருமான வரித்துறை தரப்பில், ‘‘வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அபராதம் விதித்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இதில் இந்த நீதிமன்றம் தலையிடவும் விரும்பவில்லை. எனவே, விஜய் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது, நீதிமன்றம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *