Viral Video: பிரேசில் உயிரியல் பூங்காவில் அதிர்ச்சி: சிங்கத்தின் தாக்குதலில் 19 வயது இளைஞர் பலி | Social Media Inspired Him to Befriend a Lion – It Ended in Tragedy

Spread the love

சிங்கமும் தானாக வந்த அந்த இளைஞரை, அப்படியே வாயால் கவ்வி தூக்கிச் சென்று தனக்கு இரையாக்கிவிட்டது. அப்பூங்காவில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் வருவதற்குள் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியாகியிருக்கிறார்.

பிரேசில் நாட்டின் செய்தி ஊடகங்களில் கிடைத்த தகவல்படி சிங்கத்திடம் பலியான அந்த 19 வயது இளைஞர் பெயர் மச்சாடோ என்று கூறப்படுகிறது. அவருக்கு நீண்ட காலமாகவே சிங்கத்திடம் பழக வேண்டும், அதனைப் பராமரிக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறதாம். சமூக ஊடகங்களில் சிங்கம் மனிதர்களிடம் பழகுவதைப் பார்த்து, தன்னிடமும் சிங்கம் நன்றாகப் பழகும் என்று சிங்கத்திடம் சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் பிரேசில் சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரியல் பூங்காக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *