Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! – சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்! |mg-r-jayalalithaa-vijay-two-constituencies-history-tamil-nadu-polls

Spread the love

எம்.ஜி.ஆர்:

1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இதே சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்ற பிறகு, எஸ்.எஸ். ராஜேந்திரன் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

ஜெயலலிதா:

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றியை ருசித்தார் ஜெயலலிதா.

பிறகு காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், புவனகிரி, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி என நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த காரணத்தாலும் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தாலும் அனைத்து தொகுதிகளிலும் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *