Wife arrested for biting off and spitting out her husband’s tongue for asking for egg curry every day-தினமும் முட்டை கறியா என்று கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது

Spread the love

கணவன் நாக்கை கடித்த மனைவி

இந்த சண்டை இரண்டு மணி நேரம் நீடித்தது. இதில் பல முறை இஷா தனது கணவனை அடித்தார். விபின் தனது மனைவியை அமைதிப்படுத்த முயன்றார். இதில் சமாதானம் ஆவது போன்று நடந்து கொண்ட இஷா திடீரென தனது கணவனின் நாக்கை தனது பற்களால் கடித்தார். இதில் அதிக பலத்துடன் கடித்ததில் விபின் நாக்கின் ஒரு பகுதி துண்டாக வந்து விட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த விபின் துண்டான தனது நாக்கை கையில் எடுத்துக்கொண்டு மேலிருந்து கீழே வந்தார்.

அதற்குள் விபின் பெற்றோர் எழுந்தனர். அவர்கள் விபினிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். அவரால் பேச முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களும் கூடினர். அவர்கள் இஷாவை கீழே அழைத்து அடித்து உதைத்து என்ன நடந்தது என்று கேட்டனர்.

பேச்சை இழந்த கணவன்

இதில் தனது கணவனின் நாக்கை கடித்ததை இஷா ஒப்புக்கொண்டார். விபின் துண்டான தனது நாக்குடன் மீரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் துண்டான நாக்கை பொருத்த முடியாது என்று கூறிவிட்டனர். இனி விபினால் வாழ்நாள் முழுக்க பேச முடியாது என்றும் கூறிவிட்டனர். இது குறித்து விபின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இஷாவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் இஷா மிகவும் ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டார். அதேசமயம் தனது கணவரின் நாக்கை கடித்ததை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *