இவர்களது திருமணம், வரும் 6-ம் தேதி தென்காசி மாவட்டம், புளியரையில் உள்ள சிவகாமி அம்பாள் – சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் நடைபெறுவதாக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிவமதியின் உறவினர்கள் அவரது பெற்றோரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பு வீட்டினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (1-ம் தேதி) இரவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, டவுண் கண்டியப்பேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்த பேட்டை காவல் நிலைய போலீஸார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிவமதியை ஆணவப்படுகொலை செய்ததாக ஆனந்தகிருஷ்ணனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவமதியின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.