ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையில் பணி-மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

Metro Logo
Spread the love

வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பறவைகள் உள்ளன. தென்சென்னையில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேரும். இங்கிருந்து ஒரு பகுதி உபரிநீர், ஒக்கியம் மடுவு வழியாக பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக, முட்டுக்காடு வரை சென்று கடலில் சேருகிறது.
மழைக்காலத்தில் வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வெள்ளநீர், இவ்வாறு வெளியேற்றப்பட்டு வருகிறது.இதில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும் பகிங்ஹாம் கால்வாய்க்கும் இடையே ஒக்கியம் மடுவு, இயற்கையான நீர்வழித்தடமாக அமைந்துள்ளது.

Okkiyam Maduvu

ஒக்கியம் மடுபு நீர்வழிப்பாதை

இந்நிலையில், பழைய மாமல்லபுரம் சாலையில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமான பணியின் ஒரு பகுதியாக, துரைப்பாக்கம், காரப்பாக்கம் இடையே ஒக்கியம் மடுவு பாலத்தை ஒட்டி தூகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இந்த பணிக்காக, நீர் வழிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாலத்தின் அடியில், நான்கு வழிகளில் வெளியேற வேண்டிய நீர் தற்போது, ஒருவழியில் மட்டுமே செல்ல வழி செய்யப்பட்டுள்ளதாக தெரிகறது. இதனால் சமீபத்திய மழையால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்துள்ள நீர், கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் விரிவாக்கப் பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகள் விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை பணிகள் குறித்த சமீபத்திய அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக விவாதங்களை தெளிவுபடுத்த விரும்புகிறது.
​டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது: அதிக மழைப் பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது.

இதனை சரி செய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
​நீர்வளத் துறையின் வேண்டுகோளின் படி, இந்த முக்கியமான பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அகலமான நீர்வழிப்பாதையுடன் புதிய பாலம் கட்டிய பின்னர், தற்போதுள்ள பாலத்தை இடித்து அகற்றும் பணியும் இதில் அடங்கும்.

நீர்வழிப்பாதையை 200 மீட்டராக

​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இந்த முக்கியமான நீர்வழிப்பாதை பற்றிய பொதுமக்களின் அக்கறையை கருத்தில் கொண்டு, தற்போதைய இந்த பணி மழைநீர் வெளியேற்றும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஒக்கியம் மடுவுக்கு குறுக்கே நீர்வழிப்பாதையை 200 மீட்டராக அகலப்படுத்தும் சாலைப் பணியாகும். இதனால் அடுத்த பருவமழையில் (வரவிருக்கும் பருவமழை அல்ல) அதிகரிக்கப்பட்ட நீர்வழிப்பாதை கொண்டபாலம் தயாராகும்.

பருவமழைக்கு முன்னர் நிறுத்தப்படும்

வரும் பருவமழைக்கு பின்னர், அடுத்த பருவமழைக்கு முன் இந்தப் பணியை முடித்து, ஓக்கியம் மடுவுபாலம் எதிர்கால கனமழையை சிறப்பாக தாங்கும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்படும். தற்போதுள்ள பணிகள் எதிர்வரும் பருவமழைக்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போதுள்ள நீர்வழிப்பாதைமடுவின் அடித்தள நிலை வரை சரிசெய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசியக் கொடியுடன் பேரணி- பாஜகவினர் கைது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *