சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆம்பூர்-வாணியம்பாடி, பெங்களூரு-சென்னை மற்றும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்போன் மற்றும் நகை வழப்பறி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், ரோந்து போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இதுபோன்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை நிறுத்தி சோதனை செய்வதை தவிர்த்து, அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதிலேயே முக்கியத்துவம் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆம்பூர் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறிக்கும் வழிப்பறி கொள்ளையர்களால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.