புதிய திட்டம்: ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு!

Dinamani2f2024 12 042funq3v5562fc 35 1 Ch0215 57551324.jpg
Spread the love

மகா கும்பமேளா வெகுவிமரிசையாகத் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமுதாய கூடங்கள் மூலம் ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக, ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வரும் யோகி ஆதித்யநாத், மருத்துவமனையில் திட்டத்தைத் தொடங்கி வைத்து, தன் கையால் மக்களுக்கு உணவு வழங்கினார்.

இந்த திட்டத்தில் பருப்பு, நான்கு சப்பாத்திகள், காய்கறி, சாப்பாடு, சாலட் உள்ளிட்டவை, ஏழை மக்களுக்கு வெறும் ஒன்பது ரூபாய்க்கு வழங்கப்படவிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *