வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

Dinamani2f2024 082fad0533ab 8e5b 4dce 8a2c 47463ead2fac2fstock20market20down.jpg
Spread the love

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப்ரல் 7) பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவைச் சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,449.94 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்தது.

நண்பகல் 12.10 மணிக்கு சென்செக்ஸ் 3,014.98 புள்ளிகள் சரிந்து 72,349.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 971.60 புள்ளிகள் குறைந்து 21,932.85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அனைத்து பங்குகளும் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 20.16 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *