அடிக்கடி படுத்தும் கால் ஆணி பாதிப்பு… நிரந்தர தீர்வே கிடையாதா? | The recurring trouble of corns… Is there no permanent solution?

Spread the love

அடிக்கடி இந்தப் பிரச்னை ஏற்படும்போது, கடுமையான வலி இருக்கும் என்பதால் உங்களால் நடக்க முடியாது. அது உங்களுக்கு நிற்பதற்கும் நடப்பதற்கும் பெரும் சிரமத்தைக் கொடுக்கும். ஆனால், இதற்குத் தீர்வு என்பது பிளாஸ்டர் ஒட்டுவது அல்ல என்பதுதான் எதார்த்தமான உண்மை. முதலில் அந்த ஆணிக்காலை அகற்றுவதற்கான வழிமுறைகளைச் செய்வதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும். பாதத்தின் அந்தப் பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். எனவே, அங்கு அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

பாதத்தின் அழுத்தத்தைக் குறைக்கும் பிரத்யேகக் காலணிகளைப் (Offloading footwear) பயன்படுத்த வேண்டும். அந்தக் காலணி, ஆணிக்கால் உள்ள இடத்தில் அழுத்தம் கொடுக்காதவாறு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

பாதத்தின் அந்தப் பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். எனவே, அங்கு அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாதத்தின் அந்தப் பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். எனவே, அங்கு அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பார்வையைச் சீரமைக்க நாம் எப்படித் தகுந்த கண்ணாடி அணிவதைப் பரிந்துரைக்கிறோமோ, அதேபோலத்தான் கால்களில் குறைபாடு அல்லது பாதிப்பு உள்ளவர்களுக்கும் சரியான காலணிகள் நிச்சயம் தீர்வளிக்கும். உங்களது காலின் தன்மைக்கு ஏற்பவும், பாதத்தின் வடிவத்திற்கு ஏற்பவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Customized) காலணிகளைத் தயாரித்து அணிய வேண்டும். கடைகளில் விற்கப்படும் ரெடிமேடு  காலணிகளை (Readymade footwear) அணிந்தால், இந்தப் பிரச்னை உங்களுக்கு நிரந்தரமாக குணமாகாமல், மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். மருத்துவரைச் சந்தித்து இது குறித்த மற்ற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *