International
oi-Prasanna Venkatesh
அமெரிக்காவும் ஈரானும் இடையே நடைபெற்ற 12 மணி நேர முக்கிய பேச்சுவார்த்தையில், அடுத்த 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வழிமுறை குறித்து இரு தரப்பும் உடன்பாடு எட்டியுள்ளதாக அல்ஜசிரா தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை உலுக்கி வந்த ஈரான் போரை பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் கடுமையான முயற்சிகளுக்கு பின்பு போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து தற்போது உயர்மட்ட தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை மட்டத்திற்கு வந்துள்ளது. சுவிஸ் நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் இக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கினாலும் சில சலசலப்புடனே ஆரம்பமானது.

சலசலப்புக்கு என்ன காரணம்?
அமெரிக்கா – ஈரான் இடையேயான சுவிஸ் அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்பாராத திருப்பத்தை சந்தித்ததாக தகவல்கள் வெளியானது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு முதலில் பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு வந்தது. அதன்பின் வந்த ஈரான் பிரதிநிதிகள் வந்தனர்.
டிரம்ப் விடுத்த சமீபத்திய மிரட்டலான கருத்துகளை சுட்டிக்காட்டி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்ததாகவும், ஈரான் அதிகாரிகள் கூட்டம் நடை பெறும் இடத்திற்கு வந்து அதன் பின்பு வெளிநடப்பு செய்ததாக தகவலும், வீடியோக்களும் வெளியானது.
இக்கூட்டத்தில் நடுவர் பொறுப்பில் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை மட்டும் சந்தித்த ஈரான் தலைவர், அமெரிக்கக் குழுவைச் சந்திக்காமல் திடீரென வெளியேறியதாக வீடியோ இணையத்தில் டிரெண்டானது.
இதையடுத்து நிலைமையை சமாளிக்க ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசீம் முனீரின் தலையீட்டை நாடியதாகவும், ஆனால் அவராலும் சூழலை மாற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதைக் கவனித்த ஜே.டி.வேன்ஸ் என்ன நடந்தது என்று கேட்டபோது, ஷெரீப்பும் முனீரும் நிலைமையை விளக்கிய படபடப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து நடந்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டு, பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

60 நாள் ஒப்பந்த பாதை உருவாக்கம்
ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாக இரு தரப்பு மத்தியஸ்தர் நாடுகளான பாகிஸ்தான், கத்தார் தெரிவித்துள்ளனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளசு. இந்த பேச்சுவார்த்தையில், அடுத்த 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வழிமுறை (Roadmap) குறித்து இரு நாடுகளும் உடன்பாடு எட்டியுள்ளன.
இதற்காக உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, அணுசக்தி தொடர்பான விவகாரங்கள், பொருளாதார தடைகள், ஹார்முஸ் கண்காணிப்பு மற்றும் போர் விவகார பிரச்சனைகள் குறித்து தீர்வு காண துணைக்குழுக்களை உருவாக்கி ஆலோசனை மேற்கொண்டு இரு தரப்பும் முடிவை எட்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும்
இந்த 60 நாள் காலத்தில் ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிக கப்பல்களும் தடையின்றி செல்லும் வகையில், தகவல் பரிமாற்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்த இரு தரப்பும் உடன்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்பாராத சம்பவங்களை தவிர்க்கவும், நீரிணையை திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியஸ்தர்கள் நாடுகளான பாகிஸ்தான், கத்தா தெரிவித்துள்ளனர்.
லெபனான் பிரச்சனைக்கு தீர்வு
இந்த பேச்சுவார்த்தையில், லெபனானில் நடக்கும் போர் தாக்குதலை குறைப்பதற்காவும், முழுமையாக நிறுத்துவதற்காகவும் ‘டி-கான்ஃப்ளிக்ட் செல்’ ஒன்றையும் அமைக்க இரு தரப்பும் உடன்பட்டுள்ளன. மேலும், லெபனான் பகுதியில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கான ஒப்பந்தமும் எட்டப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை, முந்தைய இடைக்கால ஒப்பந்தத்தை (MoU) அடிப்படையாகக் கொண்டு மேலும் முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று மத்தியஸ்தர் நாடுகள் உறுதி செய்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

