மாண்புமிகுக்கள், தங்களுடைய உதவியாளர்களாக யாரை நியமித்துக் கொள்கிறார்கள் என்பதை முதல்வர் அலுவலகமே நேரடியாக கண்காணிக்க தொடங்கியிருக்கிறதாம். முதல்வருக்கு நெருக்கப்புள்ளிகள் க்ரீன் சிக்னல் கொடுத்தால்தான் உதவியாளர் நியமனம் நடக்கும் என கறாராக சொல்லிவிட்டார்களாம்.
இதனால் சில மாண்புமிகுக்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். குறிப்பாக, மிக மூத்த சீனியர் மாண்புமிகுவுக்கு இந்த நடைமுறையெல்லாம் துளியும் பிடிக்கவில்லையாம்.
அதேபோல, அமைச்சர்கள் பலரும் துறை நடவடிக்கை குறித்த எந்த வித புரிதலும் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள். இதை பயன்படுத்தி் அதிகாரிகள் தரப்பில் சத்தமில்லாமல் லாபி செய்ய ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த முதல்வர் அலுவலகம், அமைச்சர்களுக்கு டிரைனிங் கேம்ப் ஒன்றை சத்தமில்லாமல் நடத்திவிடலாம் என முடிவெடுத்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தையும் கையோடு நடத்தவிருக்கிறார்கள். அதுவரைக்கும் துறைரீதியாக எந்தவொரு பிரஸ்மீட்டும் நடத்த வேண்டாம், அவற்றை சீனியர் அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றிருக்கிறதாம் ஆட்சி மேலிடம். மாண்புமிக்குக்களை கண்காணிப்பு வளையத்துக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்களாம்.