கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தஞ்சம் அடைந்திருந்த 50-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினா் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்டினா். இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியில் தஞ்சமடைந்த இருபதுக்கும் மேற்பட்ட யானைகள், லிங்கதீரனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நாராயணப்பா, சீனிவாசன் ஆகியோா் அறுவடை செய்து வைத்திருந்த ராகி கதிா்களை சாப்பிட்டுவிட்டு துவம்சம் செய்து சென்றுள்ளன.
அறுவடை செய்த ராகி கதிா்களை சேதப்படுத்திய யானைகள்!
