கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நேற்று சென்றுள்ளனர்.