ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 “விகடனை வாசிச்சு சினிமா கனவை வளர்த்துகிட்டேன்” – ஸ்ரீகணேஷ்

Spread the love

2025-ம் ஆண்டின் சிறந்த திரைப்படக் கலைஞர்களை அங்கீகரிக்கும் இந்த பிரம்மாண்ட விழா, இன்று மாலை சுமார் 5 மணியளவில் தொடங்கியது. விழாவின் முக்கிய விருதுகளில் ஒன்றான சிறந்த வசனத்துக்கான விருதை, “3BHK’ படத்திற்காக ஸ்ரீகணேஷ் தட்டிச் சென்றார். மூத்த நடிகை அம்பிகா அவர்கள், ஸ்ரீகணேஷுக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். யதார்த்தமான உரையாடல்களால் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த ‘3BHK’ படத்திற்கு கிடைத்த முதல் முக்கிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு ஸ்ரீகணேஷ் பேசியது, அரங்கத்தில் இருந்தவர்களை நெகிழச் செய்தது. அவர் பேசுகையில், “நான் எழுத்தைக் கத்துக்கிட்டதும், பல எழுத்தாளர்களின் பெயர்களைத் தெரிஞ்சுக்கிட்டதும், சினிமாவை ஆழமாகப் புரிஞ்சுக்கிட்டதும் விகடன் இதழ்கள் மூலமாகத்தான். 2006-ல் பள்ளியில் படிக்கும்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கூட கிடையாது. ஊர் பொது நூலகத்தில்தான் விகடனை வாசித்து சினிமா கனவை வளர்த்துக்கொண்டேன். இனி எழுதும்போது விகடன் கவனித்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவோடு இன்னும் தைரியமாக எழுதுவேன்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.

ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, எழுத்தின் மீது கொண்ட பற்றால் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய விருதுகளில் ஒன்றை வென்றிருக்கும் ஸ்ரீகணேஷின் பேச்சு, பல இளம் திறமையாளர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. விழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த விருதுகள் யாருக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *