`இது முட்டாள்தனமானது’ Vs `சமநிலையைப் பேண முடியும்’ – TRB ராஜா கீர்த்தனா கருத்து மோதல்! | “This is foolish” vs. “Balance can be maintained” – TRB Rajaa and Keerthana clash of views!

Spread the love

இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, “ `அரசியலை தொழில்துறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்” என்ற கருத்து, உண்மைகள் சாதகமாக இல்லாதபோது சிலருக்கு பேசுவதற்கு வசதியாக இருக்கிறது. அதே வழியைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமானக் கருத்துகளைப் பரப்புவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

நல்லாட்சிக்கு நுட்பமான அணுகுமுறை தேவை. நாங்கள் எதையும் ‘சரி – தவறு’ என்ற ஒற்றைப் பார்வையில் அணுகுவதில்லை. வேலைவாய்ப்புகளையும் சுற்றுச்சூழலையும் எங்களால் ஒரே நேரத்தில் சமநிலையாகப் பாதுகாக்க முடியும்.

அமைச்சர் கீர்த்தனா

அமைச்சர் கீர்த்தனா

தொழிற்சாலைகளை மூடுவது தொழிலாளர்களைப் பாதிக்கும். அதேபோலக் கட்டுப்பாடற்ற மாசடைவு அங்குள்ள மக்களைப் பாதிக்கும். நமது முதலமைச்சரின் தலைமையில், நாங்கள் தொழில்துறை வளர்ச்சியையும் அதேவேளையில் சுற்றுச்சூழல் விதிகளையும் சரியாகப் பின்பற்றிச் செயல்பட உறுதியேற்றுள்ளோம்.

நிலையான வளர்ச்சி என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல. அது நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நான் சட்டமன்றத்திலேயே தெரிவித்திருந்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *