‘இந்த ’29’ படம் சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவானது’- ரத்னகுமார் | “This film ‘29’ was created from a simple Facebook post” – Rathna Kumar

Spread the love

இதில் கலந்துகொண்டு பேசிய ’29’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார், “இந்தப் பக்கம் ‘கர’ அந்தப் பக்கம் ‘கருப்பு’ ஆகிய படங்களுக்கு இடையே என்னுடைய படம் வெளியாவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இதனை நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன்.

‘இந்தப் படம் கோடை விடுமுறை நாட்களில், வார நாட்களில் வெளியாவதால், இளைஞர்களின் விடுமுறை காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்’ என்று சொன்னார்.

இயக்குநர் ரத்னகுமார்

இயக்குநர் ரத்னகுமார்

இதற்கு முன்பு 2017-ல் எனது ‘மேயாத மான்’ படம் வெளியானபோது, விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதியது. ஆனால், இது ஒரு தனித்துவமான சவாலாக இருக்கிறது.

இந்த ’29’ படம் நான் எழுதிய சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவான கதைதான். எல்லோரும் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *