இளைஞர்கள் போராட்டம்: ஆதரவாக களமிறங்கிய வரலட்சுமி..! – Kumudam

Spread the love

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியிருப்பது கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட மிகக் கடுமையாக நடந்து கொண்டது என தலைநகர் பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிக்ல், “சில நேரங்களில், நாம் நம் சொந்த வாழ்க்கையில் மூழ்கியிருப்பதால், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு, நமது தலையீடு இல்லாமலேயே பிரச்சினைகள் தானாகத் தீர்ந்துவிடும் என்று நினைத்துவிடுகிறோம்.

ஆனால் சமீபத்தில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சுற்றி வரும் வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதயத்தைப் பிழிவதாகவும் உள்ளன. நமது சமூகத்தில் நாம் இன்னும் எவ்வளவு பிற்போக்கான நிலையில் இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது.

எந்த விதத்திலும் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது. நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களே நமக்கு தீங்கு விளைவித்தால், நாம் யாரிடம் செல்வது?

அவர்கள் கேட்பதெல்லாம், அடுத்த தலைமுறைக்கான நமது கல்வி முறையை மேம்படுத்த ஒரு உரையாடலைத்தான். வேறு யாரும் அவர்களுக்காகக் குரல் கொடுக்காத நிலையில், தங்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் நமது நாட்டின் இளைஞர்களுக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்.

உயிரிழப்புகளை நாம் இயல்பான ஒன்றாகக் கருதக் கூடாது. நடப்பது சரியல்ல..!!

நம் ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இது அரசியல் அல்ல; இது மனிதநேயம்..!!

சில நேரங்களில் அமைதியாக இருப்பது பலனளிக்காது. நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. தாமதமாகப் பேசியதற்கு மன்னிக்கவும். நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசியல் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இது அரசியல் அல்ல; இது மனிதநேயம்” என்று பதிவிட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *