International
oi-Halley Karthik
ஜெருசலேம்: ஈரான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒருவேளை நெதன்யாகு தோற்றுவிட்டால் அவருக்கு கடும் சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அக்.27ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரேலில் ஒரு பிரதமர் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிரப்பியிருக்கிறார் எனில், அது நெதன்யாகுதான். எனவேதான் இந்த தேர்தலில் அவர் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘கினெசெட்’ என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 120 தொகுதிகள் இருக்கின்றன. அனைத்துக்கும் ஒரே கட்டமாக அக்.27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2023 பாலஸ்தீன தாக்குதலுக்கு பிறகு நடக்கும் தேர்தல் இது என்பதால், சர்வதேச நாடுகள் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றன. நெதன்யாகு மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள், பணைய கைதிகளை மீட்பது, தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைள் உள்ளிட்டவற்றில், நெதன்யாகு மீது உள்நாட்டில் கடும் அதிருப்தி இருக்கிறது. முன்னாள் பாதுகாப்பு படைத்தலைவர் காடி ஐசென்கோட் உள்ளிட்டோர் நெதன்யாகுவுக்கு எதிரான வலுவான போட்டியாளர்களாக உருவாகியிருக்கின்றனர்.
நெதன்யாகு மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாக போர் குற்றவாளி என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஓருவேளை இந்த தேர்தலில் நெதன்யாகு மண்ணை கவ்வினால்.. இதுதான் சான்ஸ் என்று புதியதாக அமையும் அரசு நெதன்யாகுவை வைத்து செய்துவிடும். எனவே இந்த தேர்தல் நெதன்யாகுவுக்கு வாழ்வா சாவா? என்று இருக்கிறது.