ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர்.
அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிராக ‘Operation Economic Outcast’ என்கிற ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது.
இதன்படி, ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ‘இரண்டாம் கட்ட’ வரிகள் பாயும்.
இந்த வலையில் தற்போது நான்கு இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் சிக்கியுள்ளன.
அவை என்னென்ன நிறுவனங்கள்? அவற்றின் மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன?
PORTEASE PARTNERS LLP (PORTEASE): ஈரானிய பெட்ரோ கெமிக்கல் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்யப் பல சலுகைகளையும் உதவிகளையும் செய்துகொடுத்த இந்தியாவைச் சேர்ந்த சுங்கத் தரகு நிறுவனம் இது.

SADASHIVA OVERSEAS: 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2025-ம் ஆண்டு ஜூன் வரை, அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் இது.
PP SOFTTECH: ஜனவரி 2024 முதல் ஜூன் 2025 வரை, சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் இது.