ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் நேரடியாக திமுக களம் இயங்கியது. மொடக்குறிச்சி ம.தி.மு.க, ஈரோடு கிழக்கு காங்கிரஸ், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என கூட்டணிக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின் படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறவில்லை. பவானிசாகர், கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அமைச்சர் முத்துசாமி உட்பட தி.மு.க வசம் இருந்த மூன்று தொகுதிகளையும் இழந்திருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போனது அக்கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.