`எடப்பாடி பழனிசாமி வழங்கிய புதிய பதவிகளை ஏற்க மாட்டோம்’ – கடிதம் அனுப்ப அதிருப்தி நிர்வாகிகள் முடிவு | The upset cadres from admk are ready to attack back edappadi even after giving news party positions

Spread the love

வேலுமணி, எடப்பாடி பழனிசாமி

வேலுமணி, எடப்பாடி பழனிசாமி

இதனால், தற்போது வழங்கப்பட்டுள்ள பதவிகள் பெயரளவில் உயர்ந்ததாக இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரமோ நிர்வாக செல்வாக்கோ இல்லாத “அலங்காரப் பதவிகள்” என்ற பார்வை அதிருப்தி முகாமில் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக, கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவியை ஏற்க மறுத்த எம்.ஆர். விஜயபாஸ்கர், கட்சியில் இருந்து விலகியதுடன் தனது கரூர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், புதிய பொறுப்புகளை ஏற்க விருப்பமில்லை என்ற மனநிலையிலேயே அதிருப்தி நிர்வாகிகள் இருப்பதாகவும், அதிகாரமற்ற பதவிகளை ஏற்கத் தயாரில்லை என்பதை தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை அதிமுகவில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சிக்குள் அதிருப்தி அலை மேலும் தீவிரமடையுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *