தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, “தேர்தல் களத்தில் திமுகவினர் எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்திருக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் எனக்கு ஒரு நோய் வந்திருந்தது. என்னால் பேச முடியாமல் இருந்தது.
அன்றைக்கு அமைச்சராக இருந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் அவர்கள் “நீ, பேசு’ என்றார். என்னால் பேச முடியவில்லை.

ஆனால் அந்த அவையில் அண்ணன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எனக்காக பேசினார். எனது வெற்றியைப் பாராட்டி பேசிய ஒரு தலைவர் என்றால் அது எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் தான்.
நாங்கள் தொடர்ந்து நன்றிகளைச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எதிர் தரப்பில் (திமுக) இருந்து பேசக்கூடியவர்கள் யாருமே எங்களுடைய எழுச்சி தலைவர் திருமாவளவனுக்கு நன்றி சொன்னதாகத் தெரியவில்லை.