ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் விமர்சித்திருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிதின் நபினிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார்.
ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மற்றும் மொழிநடையை உற்று நோக்குங்கள்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர், அதுவும் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் இத்தகைய முறையிலா பேசுவார் ? எப்போதும் ஒரு அராஜக மனநிலையுடன் செயல்படுகிறார்.