எ.வ.வேலு வீட்டில் ரெய்டு: இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள், திமுக தலைவர் ஸ்டாலின்  – Kumudam

Spread the love

பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி லஞ்சஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கபட்டது. இந்த புகாரின் அடிப்படையில் எ.வ.வேலுக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

இந்த சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்! என பதிவிட்டுள்ளார் 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *