அதற்கு பதிலளித்த அனிருத், ” லோகேஷும் நானும் பல வருடங்களாக பழகி வருகிறோம்.
தென்னிந்திய ரசிகர்களுக்கு எங்கள் கூட்டணி மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
அதனால் அவர் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று தெரிந்ததும், எனது முதல் ரியாக்ஷன் “ஏன் நீங்க நடிக்க வரணும்?’ என்பதுதான் (சிரித்துக்கொண்டே).

ஆனால் இப்போது, குறிப்பாக இயக்குநர் அருணுடன் சேர்ந்து எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
லோகேஷைப் பொறுத்தவரை என்னுடைய வேலையை சுதந்திரமாக செய்ய விடுவார்.
அவரிடமிருந்து கதையைக் கேட்பேன், அவர் எனக்கு கதை சொல்வார். மேலும் அவர் ஷூட் செய்யும்போதெல்லாம் சில காட்சிகளை எனக்குக் காட்டுவார்.
அதைத் தவிர, இசை விஷயத்தில் நாங்கள் பெரிதாக எதுவும் விவாதிப்பதில்லை. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடுவார்” என்று பேசியிருக்கிறார்.