முதல்வர் விஜய்யை மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “நாங்கள் இனி தனி இயக்கம்.
நாங்கள் துரதிஷ்டவசமாக தி.மு.க கூட்டணியில் உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்.
உதய சூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் த.வெ.க-விற்கு ஆதரவு தரமுடியவில்லை.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இடதுசாரி போன்ற கட்சிகள் ஆதரவு அளித்திருக்கின்றன. அதில் எவ்விதத் தவறும் இல்லை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடலாம் என்றார்கள். பிறகு உதயசூரியனில் போட்டியிடுங்கள் என்றார்கள்.