ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க | Overnight Fame!: How TMC Mutiny Pushed Fringe Tripura Party NCPI into National Spotlight

Spread the love

India

oi-Halley Karthik

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வெடித்ததிருக்கின்றன. இப்படி இருக்கையில் இக்கட்சியின் எம்பிக்கள் போகிற போக்கில்.. நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (NCPI) எனும், அங்கீகரிக்கப்படாத கட்சியை ஓவர் நைட்டில் பேமஸாக்கி இருக்கிறார்கள்.

அதாவது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தற்போது அக்கட்சிக்குள் பூகம்பம் வெடித்திருக்கிறது.

Nationalist Citizens Party of India

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று மம்தா ஒருவரை கை காட்ட.. அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று கிளம்பிய எம்எல்ஏக்கள், வேறு ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். சரி சட்டமன்றத்தில்தான் இப்படி இருக்கிறது, நாடாளுமன்றத்திலாவது கட்சியை கட்டுக்குள் வைத்திருப்போம் என்று மம்தா முயற்சிக்க.. அதுவும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

கல்தா கொடுத்த எம்பிக்கள்

மொத்தமுள்ள 28 திரிணாமுல் எம்பிக்களில் 20 பேர் கூண்டோடு கட்சியை விட்டு ராஜினாமா செய்துவிட்டு, ஒரு மொக்கையான கட்சியில் போய் சேர்ந்திருக்கிறார்கள். அந்த கட்சியின் பெயர்தான் நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (NCPI). இந்த கட்சிக்கு அட்ரஸ் எல்லாம் எதுவும் கிடையாது. அவ்வளவு ஏங்க.. இந்த கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படக்கூட இல்லை.

டம்மி கட்சி

அசாம், திரிபுராவில் லேசான நடமாட்டம் கொண்டிருக்கும் இந்த கட்சி, கடந்த 2023ம் ஆண்டு திரிபுரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெறும் 822 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது. இப்பேற்பட்ட கட்சியில் போய் 20 எம்பிக்கள் பல்க்காக சேர்ந்திருப்பதன் மூலம், ஓவர் நைட்டில் இக்கட்சி பேமஸாகியிருக்கிறது. கட்சியை பற்றி கூகுளில் எல்லோரும் தேட தொடங்கியிருக்கின்றனர்.

காரணம் என்ன?

இதற்கு பின்னர் அரசியல் காரணம் இருக்கிறது. ராஜினாமா செய்த எம்பிக்கள், நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று கூறி வந்தனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்தா கொந்தளிக்க, பதவி பறிபோய்விடக்கூடாது என்பதால் சட்டென கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, NCPI கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.

கட்சித் தாவல்

இப்படி எல்லாம் பண்ணா.. கட்சித் தாவல் தடை சட்டம் பாயாதா? என்று கேள்வி எழலாம். ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு எம்எல்ஏக்களோ, எம்பிக்களோ போகிறார்கள் எனில், எத்தனை பேர் போகிறார்கள்? என்கிற கணக்கு இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இந்த சட்டம் பாயும். அதாவது மொத்தமுள்ள எண்ணிக்கையில் 3ல் 2 பங்கு எம்பிக்கள்/எம்எல்ஏக்கள் கட்சி தாவினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதன்படி மொத்தமுள்ள 28 திரிணாமுல் எம்பிக்களில் 20 எம்பிக்கள் என்பது, 3ல் 2 பங்கை விட அதிகமாகும்.

பதவியை காப்பாற்றிக்கொள்ள

பதவி கையை விட்டு போகாமல் இருக்கவே இப்படி ராஜினாமா செய்து டம்மி கட்சியில் போர் சேர்ந்து இருக்கிறார்கள். திரிணாமுல் எம்பிக்களின் இந்த நடவடிக்கை, 2016-ல் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோது நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. அப்போது முன்னாள் முதல்வர் நபம் துகியைத் தவிர மற்ற அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் ‘அருணாச்சல மக்கள் கட்சி’யில் (PPA) இணைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்து, அங்கு பாஜகவின் முதல் முழுமையான ஆட்சியை அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *