மேலும் தனக்கு அதிகமாக வாக்கு வாங்கி கொடுக்கும் பூத் கமிட்டி நிர்வாகிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும், அரை பவுன் தங்கமும் கொடுப்பதாக ஆஃபர் கொடுத்தது நன்றாகவே எடுப்பட்டது. அதிமுக தரப்பில் வலுவான வேட்பாளர் இல்லாததது போன்ற காரணங்களால் தி.மு.க சாதகமாக இருக்க அவர்கள் கண்டுகெள்ளமால் விட்ட த.வெ.க தான் கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக சார்பில் போட்டியிட்ட பிரகாஷ், ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்து கட்சி தொடங்கியதும், மாவட்டச் செயலாளராக பொறுப்பு வாங்கியவர். பெரும்பாலான இளைஞர்களுக்கு அறிமுகமான முகம் என்றதோடு, கட்சி தொடங்கியதிலிருந்தே தொகுதி மக்களை பார்த்து அறிமுகமாகியிருக்கிறார். இதனால் அறியப்படுகிற முகமாகவும் வலம் வந்தார். இது தேர்தலின் போது எதிரொலித்தது. ஆரம்பத்திலிருந்தே லீடிங்கில் சென்ற பன்னீர் செல்வம் அதன் பின் பின்தங்கத் தொடங்கினார்.

10-வது சுற்றின் போது தவெக முன்னிலை பெற்றபோது பதறிப்போனார் ஓ.பி.எஸ். அதன் பின்பு 200 ஓட்டுகள் லீடிங்கில் தவெக-வை முந்தியவர், அதே கணக்கிலேயே தொடர்ந்து வந்தார்.
கடைசி சுற்றின் போதுதான் கூடுதலாக வாக்குகளை பெற்று, இறுதியில் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஓ.பி.எஸ். இதன் மூலம் தன்னுடைய ஆறாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஓ.பி.எஸ்.