’கமல்ஹாசன் பாணியில் கோவையைக் குறிவைக்கிறாரா தனுஷ்?’ – கோவையில் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவது என்ன? \ What is the reason behind actor Dhanush strengthening his fan club in Coimbatore

Spread the love

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக வலுப்படுத்தவும், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

முதற்கட்டமாக கோவையில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நற்பணி இயக்கங்கள் தொடங்கி, உறுப்பினர்கள் சேர்க்கைகளை அதிகரிக்க வேண்டும். தலைவர் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தனுஷ் அரசியலில் களம் இறங்குவதற்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் கோவையைக் குறிவைத்து தனுஷ் தனது அரசியல் பயணத்தைத் துவங்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தனுஷ் ரசிகர்களிடம் பேசியபோது, “தற்போது தமிழ்நாடு முழுக்க 55 மாவட்டங்களில் தலைமை மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்த தானம் செய்தல், அன்னதானம் செய்தல், கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன.

’கோவையில் ரசிகர்கள் அதிகம்’

மற்ற மாவட்டங்களை விட கோவையில் தனுஷுக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ரசிகர்களே உள்ளனர். சமீபவத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தனுஷ் கோவை வந்தபோது, அவரைக் காண 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். ஏற்கனவே பலமாக இருக்கும் பகுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *