“கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்” – கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ குற்றச்சாட்டு | Mla Kanimozhi Santhosh alleges that the Karur company discussed a package with her

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், ”தமிழில் வணக்கம் என்று கூறினால் ட்ரோல் செய்து விடுவார்கள். எனவே ட்ரோலில் உள்ளதையே கூறிவிடுகிறேன், அனைவருக்கும் மன்மத வணக்கம்.

100 நாளில் இந்த மேனா மினுக்கி என்ன செய்து கிழித்து விட்டார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு பணியை ஆற்றி வருகிறேன். சித்தி சீரியல், அண்ணாமலை சீரியல், பிக் பாஸ் எல்லாம் தாண்டி சட்டசபை தற்போது நன்கு ரீச் ஆகியிருக்கிறது.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிடம் பற்றி பேசும்பொழுது தனக்கு மிகவும் கோபம் வந்தது. ஆனால் அங்கு எதையும் காட்டிக் கொள்ள முடியாது. அதனால் தற்போது அந்த உண்மையைச் சொல்கிறேன். நான் கட்சியில் சேர்வதற்கு முன்பு இதே ஜோதிடரிடம் கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

கனிமொழி சந்தோஷ்

கனிமொழி சந்தோஷ்

அந்த அழைப்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாகக் கூறி எனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு 15 லட்சம் ரூபாய் தருவதாக பேக்கேஜ் பேசினார்கள். அப்போது கூட திமுக ஜெயிக்காது என்று கணித்தேன். என்னிடம் அவர்கள் பேசிய ரெக்கார்டு எல்லாம் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *