அந்தவகையில், கரூர் மதியழகனுக்கும் முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவியை கொடுக்க முதல்வர் முடிவெடுத்திருக்கிறார். கரூர் சம்பவத்தின் போது காவல்துறை முதலில் கைது செய்தது கரூர் மத்திய மாவட்டச் செயலாளர் மதியழகனைத்தான். அப்போதே எங்களின் தலைவர் அவரை நினைத்து வருந்தி மனம் நொந்து போனார். சிறையிலிருந்து வந்த பிறகு மதியழகனை குடும்பத்தோடு நேரில் அழைத்து நன்றி கூறி தைரியம் சொன்னார்.

‘அவருக்கு என்ன செய்யணும்னு நாமதான் பார்த்து செய்யணும்’ என உடனிருந்தவர்களிடம் கூறி மதி மீது தனிப்பட்ட அக்கறையும் எடுத்துக் கொண்டார். தேர்தலில் சீட் கொடுத்த போதிலும் மதி தோல்வியடைந்தார். ஆயினும் மதிக்கு உரிய கௌரவத்தை கொடுக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். அதனால்தான் முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவிக்கு மதியின் பெயரை டிக் அடித்து வைத்திருக்கிறார். மேலும், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சிக்கு புதிதாக வந்திருப்பதால் மதியின் இடத்துக்கு ஆபத்து வருமோ என்று எழுந்த பேச்சுகளுக்கும் கூட இதன்மூலம் முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்’ என்கின்றனர்.
‘வாரிய பதவிகளுக்கு அத்தனை அதிகாரம் கிடையாது. அது ஒரு கௌரவம் மட்டுமே. அதை வாங்கிக் கொண்டு மதி திருப்தியடைந்தால் கரூரில் எம்.ஆர்.வியின் ஆதிக்கமே மேலோங்கும்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.