`கரூர் ரௌடி கும்பல் துணையுடன் திமுக பணப்பட்டுவாடா’ – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் பரபரப்பு புகார்!

Spread the love

கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, “கோவை தெற்கு தொகுதி முழுக்க கரூரில் இருந்து வந்த 2 ஆயிரம் ரௌடிகள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு மிரட்டிப் பணம் கொடுப்பதாக எங்களுக்குப் புகார் வந்தது. நாங்கள் பார்க்கச் சென்றபோது, எங்கள் கட்சிக்காரர்களைக் கடித்து வைத்துள்ளார்கள். அவர்கள் என்ன மிருகசாதியா? அவ்வளவு பசியா?

தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. நேற்று 8 இடங்களில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை வழக்கு பதிவுசெய்யவில்லை. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். இன்று பரிசுப்பொருள்கள் தர உள்ளார்கள். மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், பாரா மிலிட்டரி வைத்து தேர்தலை நடத்த வேண்டுமெனவும் கலெக்டரிடம் மனு அளித்தோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *