கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! – காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் – 01

Spread the love

காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்கள் ஆரோக்கியத்துக்காக முட்டை சேர்த்து சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தார் எம்ஜிஆர். உயர் கல்வியைப் பொறுத்தவரை அவரது பங்களிப்பு புதிய கதவுகளை தமிழகத்துக்கு திறந்து வைத்தது எனலாம்.

பியுசி முறையை ஒழித்தது இதில் முக்கியமானது, 10-ம் வகுப்பு வரை கல்வியை முடித்துவிட்டாலும் 11 படிக்க, அதன் பின்னர் கல்லூரி படிக்க நகரத்துக்கே செல்ல வேண்டும். இதனால் உயர் கல்வி அனைவருக்கும் சாத்தியமாகவில்லை. இதனையடுத்தே, 1978ஆம் ஆண்டு பிளஸ் 2 கல்வி முறையை எம்ஜிஆர் கொண்டு வந்தார்.

 எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

அதாவது 10, +2, +3 (கல்லூரி) கல்வி முறையை எம்ஜிஆர் கொண்டு வந்து நகரத்தில் படித்த PUC கல்வியை அவரவர் சொந்த கிராமத்தில் கிடைக்க வைத்தார். இது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 10-வதுக்குப் பின்னர் பெண் கல்வியும் பரவலாக சாத்தியமானது.

தமிழகத்தில் அதிகளவிலான கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை திறக்க வழிவகுத்தவர் எம்ஜிஆர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆண் / பெண் என்று தனித்தனியாக இல்லாமல் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் ஆண் / பெண் இருபாலரும் சேர வழிவகுத்தார்.

1980-களில் உயர்கல்வி முடித்தவர்கள் இன்று 50+ வயதில் இருக்கும் தலைமுறையினர். உயர் கல்வியால் அவர்கள் பெற்ற பலன்கள் கணிசமாக அதிமுக அபிமானிகளைப் பெற வழிவகுத்தது என்று கொள்ளலாம்.

ஜெயலலிதா!

அதேபோல், கல்வியை அரசியல் ஆயுதமாக மட்டுமின்றி, அக்கறையுடனும் மிகச் சிறப்பாக பயன்படுத்திய ஆளுமைகளுள் முக்கியமானவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டத்தைக் கவனிக்கும் முதல் பொறுப்பைப் பெற்ற அவர், உத்வேகத்துடன் செயல்பட்டு அந்தப் பணியை சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்.

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தின் கல்வி நிலையை மேம்படுத்தியும் கவனிக்கத்தக்கது. அந்த வகையில் பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள், மாணவர்களுக்கு இலவச காலணிகள், கல்வி உபகரணங்கள், இலவச சைக்கிள் திட்டம், விலையில்லா பாடப் புத்தக்கங்கள் தொடங்கி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வரை அவர் செய்த கல்விப் புரட்சியும் பொதுவான வாக்காளர்களை வசீகரித்தது நினைவுகூரத்தக்கது.

அதிமுகவின் முந்தைய ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட வேண்டியது. இதை இன்றளவும், இபிஎஸ் அரசியல் மேடைகளில் மார்தட்டி சுட்டிக் காட்டுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *