ரயில் பயணங்களின் போது ஜன்னலோரம் அமர்ந்து, வேடிக்கை பார்த்தபடியே சுடச்சுட ஒரு கப் டீயும், சமோசாவும் சாப்பிடுவது எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனால், அடுத்த முறை நீங்கள் ரயிலில் சமோசா வாங்கும்போது இந்த வீடியோ உங்கள் நினைவுக்கு வந்து பயத்தை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. நாம் அவ்வளவு ஆசையாக வாங்கிச் சாப்பிடும் சமோசாக்கள் எவ்வளவு அசுத்தமாக விற்கப்படுகின்றன என்பதைக் காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்தப் பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் வாசலுக்கு அருகே அமர்ந்திருக்கும் வியாபாரி ஒருவர், மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அதிர்ச்சி என்னவென்றால், பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்த சமோசா பெட்டியின் மீது, கொஞ்சம் கூட பயமே இல்லாமல் தனது இரண்டு கால்களையும் நீட்டி, அதன் மீது மிதித்தபடி அமர்ந்திருக்கிறார். பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் இந்தச் செயல், ரயில் உணவுகளின் சுத்தம் மற்றும் மக்களின் உடல்நலம் குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.