கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பகுதியில் தேடி உள்ளனர்.
அப்போது முட்புதரில் காயங்களுடன் குழந்தையைப் பார்த்த மக்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அக்குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.