தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.
அந்தவகையில் காங்கிரஸ் தவெக உடன் இணைந்துள்ளதால், இந்தச் சூழலை பயன்படுத்தி திமுக உடன் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக அரசியல் மட்டங்களில் பேச்சு அடிப்படுகிறது.
தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட மசோதாக்களுக்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக நினைப்பதாகவும், அதற்கு திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திமுகவுக்கு ஆசை வார்த்தை காட்டும் பாஜக!
இந்தச் சூழலில் தான், ” தொகுதி மறுசீரமைப்பை ஒப்புக்கொள்ளுங்கள், அதன் பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் நாங்கள் கொண்டு வரும்போது அதையும் ஒப்புக்கொள்ளுங்கள்.
அப்படி ஒப்புகொண்டால் 2029-லேயே சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும், நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம் என்று பா.ஜ.க திமுகவுக்கு ஆசை வார்த்தை காட்டுகிறது” என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கொளுத்தி போட்டு இருக்கிறார்.