இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு மேல் வைத்துக்கொள்ள வேண்டாம். அதிகம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள் மோசடி பேர்வழிகளின் கையில் சிக்கி விடுகிறது. அதனால், இதில் கவனம் தேவை.
எக்காரணத்தைக் கொண்டும் 2 கிரெடிட் கார்டுகளுக்கு மேல் வேண்டாம். ஒருவேளை, அது உங்களிடம் இருந்தால், அதை சரண்டர் செய்துவிடுங்கள்.
டைம் பாஸ், காசு வரும் என்று ஆன்லைன் சூதாட்ட வலையில் மட்டும் விழுந்துவிடவே விடாதீர்கள்.
பார்க்காத OTTக்களை தொடர்ந்து ஆட்டோ ரினியூவலில் இருந்தால், அதை ரிவ்யூ செய்து மாற்றுங்கள்.
இப்போது செய்யலாம்… அப்போது செய்யலாம் என்று முதலீட்டைத் தள்ளிப்போட்டு கொண்டு இருக்காதீர்கள். உடனே தொடங்குங்கள்.
பல பல மோசடிகள் இன்றைய காலக்கட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதில் சிக்காமல் தப்பித்துக்கொள்வது நம் சமார்த்தியம் தான்.
குழந்தைகளுக்கு அதிக பொருள்களை வாங்கிக் கொடுத்து, பணம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் செய்யாதீர்கள்.
மிக மிக முக்கியமாக, நிதி திட்டமிடலுக்கு ஒரு இலக்கு நிர்ணயித்து முதலீடு, சேமிப்பை செய்யுங்கள். அப்போது தான் அது முழு கரையை சென்று சேரும்.