ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னைக்கான பிரதான காரணங்கள், சர்க்கரைநோய், தைராய்டு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவைதான். ஃப்ரோஸன் ஷோல்டர் பாதிப்புக்கு எடுத்த உடனேயே அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. முதலில் பிசியோதெரபி சிகிச்சையே பரிந்துரைக்கப்படும்.
அதில் எந்த முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் செய்யச் சொல்வோம். ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் (Diabetes), தைராய்டு (thyroid) மற்றும் கொலஸ்ட்ரால் (cholesterol) பிரச்னைகள் உள்ளனவா என்று உறுதிசெய்ய வேண்டும்.

பிசியோதெரபியில் பலன் இல்லையெனில், மயக்க மருந்து கொடுத்து, தோள்பட்டையைத் தளர்வாக்கும் சிகிச்சை (Manipulation under anesthesia) செய்யப்படும். இதிலும் முன்னேற்றம் இல்லையெனில், நுண்துளை அறுவை சிகிச்சை (Key-hole surgery) செய்யப்படும். ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னையானது இரண்டு தோள்பட்டைகளிலும் வரக்கூடும்.
பொதுவாக நாம் அதிகம் பயன்படுத்தும் கையில் இது முதலில் ஏற்படும். ஒருவேளை இடது தோள்பட்டையில் வலி ஏற்பட்டால், அது இதயப் பிரச்னை (Heart problem) காரணமாக இருக்கலாம் என்பதால் அதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தோள்பட்டை வலி என அலட்சியமாக இருப்பது ஆபத்தாகலாம்.
டாக்டர் ரமேஷ்பாபு:
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்பாட் மருத்துவமனையின் இயக்குநர். எலும்பியல் மருத்துவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.